உண்மை கவிதைகள் வரிகள் | Unmai Kavithai

இந்த தொகுப்பில் “உண்மை கவிதைகள் வரிகள் | Unmai Kavithai” காணலாம்.

உண்மை கவிதைகள் வரிகள் | Unmai Kavithai

உண்மை ஒரு போதும்
ஆபத்தானது அல்ல.

பொய்யால் செழிப்பாக
வாழ்வதை விட உண்மைக்காக
துன்பப்படுவது மிகச் சிறந்தது.

நீங்கள் மற்றவர்களை சில
மணிநேரம் முட்டாளாக்கலாம்..
ஆனால் அவர்களை எல்லா
நேரத்திலும் முட்டாளாக்க
முடியாது.

நீங்களே நேர்மையாக
இல்லாவிட்டால் வேறு
யாருடனும் நீங்கள்
உண்மையாக நேர்மையாக
இருக்க முடியுமா..?

உண்மைக்காக எதையும்
துறக்கலாம்; ஆனால்
எதற்காகவும் உண்மையைத்
துறக்காதே..!

உண்மையும் நேர்மையும்
உள்ளவனாக வாழ்ந்தால்
அஞ்சா நெஞ்சம்
கொண்டவனாக இருக்கலாம்.

உங்கள் கண்கள்
காணாதவற்றிற்காக உங்கள்
காதுகளை நம்ப வேண்டாம்.

உண்மையாகவும்
நேர்மையாகவும் இருப்பது
அடுத்தவனுக்காக இல்லை.
நமக்காக..!

நேர்மையாகவும்
உண்மையாகவும்
இருப்பவர்களை தான்
வாழ்க்கை அதிகம்
ஏமாற்றி விடுகின்றது.

உள்ளத்தில் உண்மையும்
தைரியமும் இருந்தால்
நடக்கும் பாதை
நேரானதாகவே இருக்கும்.

பணத்திற்காக
உண்மையை விற்ற
அற்ப நபரின் மனம்
ஒரு போதும் அமைதியாக
இருக்காது.

உரிமை இல்லாத உறவும்
உண்மை இல்லாத
அன்பும் நேர்மை இல்லாத
நட்பும் என்றும்
நிரந்தரம் இல்லை.

ஒரு உண்மையான மனிதன்
யாரையும் வெறுக்க மாட்டான்.

நாம் உண்மையின் பாதையில்
நடக்க வேண்டும்..
ஏனென்றால்
உண்மை தான்
இறுதியில் வெல்லும்.

உண்மைக்கு ஒத்திகை
தேவையில்லை.

கஷ்ட காலங்களில் தான்
நாம் உண்மையான
உறவுகளை காண்கிறோம்.

மிகவும் ஆபத்தான
பொய்கள் என்னவென்றால்
பாதி சிதைந்த உண்மைகள்.

குழந்தைகளும் முட்டாள்களும்
உண்மையாக பேசுகிறார்கள்.

நேர்மையும் உண்மையும்
விலை உயர்ந்த பரிசு
எல்லா மனிதர்களிடமிருந்து
அதை எதிர்பார்க்க வேண்டாம்.

நீங்கள் எதையாவது
உண்மையாகவும்
நேர்மையாகவும்
செய்ய விரும்பினால்
அதை எப்போதும் நீங்களே
தனியாக செய்து கொள்ளுங்கள்.

தவறு செய்யும் மனிதர்களை
பார்த்து தவறாக பேசாதீர்கள்
ஏனென்றால் உங்கள்
வாழ்க்கை இன்னும்
முடியவில்லை.

உண்மையான வார்த்தைகள்
எப்போதும் அழகாக
இருப்பதில்லை. அழகான
வார்த்தைகள் எப்போதும்
உண்மையாக இருப்பதில்லை.

உண்மை சில நேரங்களில்
வலிக்கும் ஆனால் இறுதி
வரை வாழ வைக்கும்.
பொய் எல்லா நேரமும்
மனிதனைக் கொல்லும்.

உன்னை வெறுப்பவர்கள்
வெறுக்கட்டும் ஆனால்
நீ எப்போதும்
உண்மையாக இரு.

அன்பும் ஒரு நாள்
தோற்றுப் போகும்
உண்மை இல்லாதவரை
நீ நேசித்தால்.

பொய்யான உறவுகளுக்கு
முன் புன்னகையும் ஒரு
பொய் தான். உண்மையான
உறவுகளுக்கு முன் கோபம்
கூட புன்னகை தான்.

எனக்கு என் வாழ்க்கையில்
நான் கஷ்டப்படாமல்
கிடைத்த ஒரு விடயம்
கஷ்டம் மட்டும் தான்.

ஆணின் அன்பில் மென்மை
இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் நிச்சயம்
உண்மை இருக்கும்.

நேசித்த பின் மறந்தால்
அது வெறும் நினைவுகள்..
வெறுத்த பின்பும் நேசித்தால்
அது தான் உண்மையான
உறவுகள்.

உனக்கு பிடித்தவரிடம்
அன்பாக இரு உன்னைப்
பிடித்தவர்களிடம் எப்போதும்
உண்மையாக இரு.

உண்மையான உழைப்பிற்கு
ஊதியம் உண்டு..
உண்மையான அன்பிற்கு
அர்த்தம் உண்டு.. உண்மையான
காதலுக்கு கனவு உண்டு..
உண்மையான வாழ்க்கைக்கு
உயர்வு உண்டு.

மேலும்