உழைப்பு கவிதை வரிகள்

உழைப்பு கவிதை

இந்த உழைப்பு கவிதை வரிகள் கடின உழைப்பை நம்புவர்களுக்கு சிறந்த ஊக்கத்தைக் கொடுக்கும்.

உழைப்பு கவிதை வரிகள்

ஒரு போதும் உன் உழைப்பை
கை விடாதே..! தோல்வி மற்றும்
நிராகரிப்பு ஆகியவை வெற்றி
பெறுவதற்கான முதல் படிகள்.

இதைச் செய்ய முடியாது என்று
சொல்லுபவர்கள்.. செய்து
முடிப்பதற்காக கடினமாக
உழைப்பவர்களுக்கு இடையூறு
செய்யக் கூடாது.

கடினமாக உழைக்காததை விட
மோசமானது.. தவறான திசையில்
கடினமாக உழைப்பது.

தடைகள் இருக்கும்.. சந்தேகங்கள்
இருக்கும்.. ஆனால் கடின உழைப்பால்
இவை அனைத்தையும்
வெல்ல முடியும்..

உங்களுக்கும் வெற்றிக்கும்
இருக்கும் இடைவெளி
கடின உழைப்பு. (உழைப்பு கவிதை வரிகள்)

வெற்றி பெற விரும்பினால்
உங்கள் பாதையில் உள்ள
தடைகளை சமாளிக்க நீங்கள்
உழைக்க வேண்டும்.

நாம் எப்போதும் மற்றவர்களின்
செல்வத்தையும் வாழ்க்கை
முறையையும் பார்க்கிறோம்..
ஆனால் அவர்களின் கடின
உழைப்பை பார்ப்பதில்லை.

வேலை செய்யுங்கள்..
உங்களுக்குத் தேவையானதைப்
பெறுவீர்கள். கடினமாக
உழைத்தால் நீங்கள் விரும்புவதை
நீங்கள் பெறுவீர்கள்.

கடின உழைப்பின் விதைகளை
விதைக்கவும் நீங்கள் வெற்றியின்
பலனை அறுவடை செய்வீர்கள்.

இலகுவாக கிடைக்கும் எதுவும்
விரைவில் மறைந்து விடும்.
கடினமான உழைப்பினால்
கிடைப்பது மட்டுமே
நிலைத்து நிற்கும்.

உங்களது அனைத்து
உழைப்பையும் கடைசி
நேரத்தில் கைவிட்டால் உலகம்
உங்களை ஒரு போதும் அறியாது.

கடினமாக உழையுங்கள் உங்கள்
உழைப்பை மட்டும் நம்புங்கள்.

அனைவரும் வாழ்வில் உயர
விரும்புகிறார்கள். ஆனால் பலரும்
கடினமாக உழைக்க விரும்புவதில்லை.

மற்றவர்களிடம் இருந்து உன்னை
வேறுபடுத்தும் விடயம்
உன் உழைப்பு தான்.

உன்னால் முடியாது என்று
உன்னிடம் நீ மட்டுமே சொல்ல
முடியும். அப்படி உன் வாய்
உன்னிடம் சொல்லும் போது
நீ செவிடனாய் இரு.

ஒரு விடயத்தை நிறுத்த
எண்ணும் போது அதை ஏன்
தொடங்கினீர்கள் என்று
சிந்தியுங்கள். (உழைப்பு கவிதை வரிகள்)

செயல் என்பது அனைத்து
வெற்றிகளுக்கும் அடித்தளமாகும்.

கடின உழைப்பு சிறந்தது.
அது என்றும் பலனளிக்கும்.

உங்களிடம் இருப்பதற்கு
நன்றி சொல்லுங்கள் உங்களிடம்
இல்லாதவற்றிற்காக
கடுமையாக உழையுங்கள்.

எந்த போராட்டமும் இல்லை
முன்னேற்றமும் இல்லை என்றால்
வெற்றியும் உனக்கு இல்லை.

கடவுள் எல்லாவற்றையும்
உழைப்பின் விலையில் விற்கிறார்.

நீங்கள் நேற்று செய்ததை விட
இன்று நீங்கள் கடுமையாக
உழைக்க வேண்டும்.

கடினமாக உழைக்க
பெரிய கனவு தேவை.

உறுதியுடன் எழுந்திருங்கள்
திருப்தியுடன் நித்திரைக்கு
செல்லுங்கள். (உழைப்பு கவிதை வரிகள்)

நீங்கள் உழைப்பினை
கைவிடும் வரை.. நீங்கள்
ஒரு போதும் தோற்றவர் அல்ல.

பெரிய வெற்றிகள்
கடின உழைப்பு மற்றும்
விடாமுயற்சியால் வருகின்றன.

ஒரு செயலை சிறப்பாக
செய்வதற்கு ஒரே வழி நீங்கள்
செய்வதை நேசிப்பதே.

எளிதில் கிடைப்பது
நீடிக்காது நீடிப்பவை எளிதில்
கிடைப்பதில்லை.

நான் என் வாழ்க்கையில்
மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தேன்
அதனால் தான்
வெற்றி பெறுகின்றேன்.

நீங்கள் இளமையாக இருக்கும்
போது வியர்வையற்று இருந்தால்..
வயதாகும் போது அது
கண்ணீராக மாறும்.

ஒரு கடின உழைப்பாளியின்
அடையாளம் புகார் இல்லாமல்
வேலை செய்வது.

கடினமாக உழைக்கவும் வியர்வை
சிந்தவும் அதற்கான வெகுமதிகள்
உங்களுக்கு கிடைத்தே தீரும்.

மேலும்