அக்கா தம்பி கவிதைகள் வரிகள்

Akka Thambi Kavithaigal in Tamil

இந்த தொகுப்பில் “அக்கா தம்பி கவிதைகள் வரிகள்” காணலாம்.

  • அக்கா தம்பி கவிதைகள் வரிகள்
  • தமிழ் அக்கா தம்பி பாசம் கவிதை வரிகள்
  • அக்கா தம்பி கவிதை
  • Akka Thambi Kavithaigal in Tamil
  • Akka Thambi Kavithai in Tamil

அக்கா தம்பி கவிதைகள் வரிகள்

“அக்கா” பாசத்தின் தாய்
அரவணைப்பின் அன்னை..
மகிழ்ச்சியின் அம்மா..!

தம்பியின் கோபத்திற்கு
அடங்கவும் அதே தம்பியை
தன் அன்பால் அடக்கவும்
தெரிந்த ஒரு பெண் அக்கா
என்றால் அந்த
அக்கா தம்பி பாசம்
ஒரு சொர்க்கம் தான்..!

நேரம் காலம் பார்த்து
சண்டை போடுவதல்ல
அக்கா தம்பி பாசம்..
நினைத்த நேரம் எல்லாம்
சண்டை போடுவது தான்
அக்கா தம்பி பாசம்..!

தம்பிகளுக்கு தான் தெரியும்
தன் அக்காவின் அரவணைப்பும்
கண்டிப்பும் இன்னொரு
தாய்க்கு சமம் என்று..!

தம்பியை குழந்தையாக
பார்ப்பதும் அக்காவை
அம்மாவாக பார்ப்பதும் தான்
வார்த்தையால் விவரிக்க
முடியாத உன்னதமான உறவு
அக்கா தம்பி..!

பிறப்பு, இறப்பு, காதல், வாழ்க்கை
எல்லாம் ஒரு முறை ஆனால்
உன் மீது கொண்ட பாசம் மட்டும்
உன் தம்பி சாகும் வரை..
அக்கா..!

அக்கா தம்பியின் பாசத்திற்கு
முன்னால் அம்மா அப்பாவின்
பாசம் கூட தோற்றுப்போகும்..!

தம்பிகள் இருக்கும்
அக்காக்களுக்கு மட்டுமே
தெரியும்.. அது குழந்தை அல்ல
குட்டி சாத்தான் என்று..!

தம்பிக்கு அக்காவிடம்
இருந்து வரும் அன்பினை விட
சிறந்தது வேறு எதுவுமில்லை..
அக்காவிற்கு தம்பியிடம்
இருந்து வரும் அன்பினை விட
சிறந்தது வேறு எதுவுமில்லை..!

அக்காவின் கண்ணீரை
தாங்கிக் கொள்ளும் சக்தி
தம்பிக்கும் இல்லை..
தம்பியின் கண்ணீரை
தாங்கி கொள்ளும் சக்தி
அக்காவிற்கும் இல்லை..!

எவ்வளவு தான் சண்டை
போட்டாலும் கடைசி வரை
பிரியாமல் இருக்கும்
ஒரே உறவு அக்கா தம்பி
உறவு மட்டுமே..!

வயதால் எவ்வளவு தான்
வளர்ந்தாலும் அக்காவுக்கு
தன் தம்பி என்றுமே
சிறு குழந்தை தான்..!

சின்ன சின்ன கோபங்கள்..
சின்ன சின்ன சண்டைகள்..
நட்பு.. பாசம்.. நேசம்..
எல்லாம் வேண்டும்
அக்கா தம்பியின்
உண்மையான அன்புக்கு..!

உன் அன்பிற்கு நான் அடிமை.
உன் அரவணைப்பில்
நான் குழந்தை..
உன் அச்சத்தில் நான்
உன் தம்பி..!

தாயிடம் கூட சில உண்மைகள்
மறைப்பதற்கு இருக்கலாம்..
ஆனால் அக்காவிடம்
மறைப்பதற்கு பொய்கள் கூட
ஒன்றுமில்லை..!

தாயின் மறு உருவமாக நீ..
உனது முதல் குழந்தையாக நான்
அன்பால் இணைந்து இருக்கும்
இரு மலர்கள்
அக்கா – தம்பி..!

அக்கா எனும் வார்த்தையில்
தாய்மையை முதன் முதலாய்
தந்து என் கண்ணீரிலே
மொத்த உயிரையும்
வைத்தவன் அவன்
என் தம்பி..!

அக்கா – தம்பி
உறவைப் பற்றி கவிதை
எழுத முயன்று தோற்றேன்..
இந்த அக்கா – தம்பி உறவே
அழகிய கவிதை
என்பதை உணர்ந்து..!

மறு ஜென்மம் வந்தால் கூட
நான் தான் இவளின் தம்பி..
என்றும் என்றென்றும்
இவளின் சொந்தம் வேண்டும்..!

இது போன்ற பதிவுகளை மேலும் படிக்க…