சிரிப்பு கவிதைகள் வரிகள்

Sirippu Kavithaigal in Tamil

இந்த தொகுப்பு “சிரிப்பு கவிதைகள் வரிகள்” உள்ளடக்கியுள்ளது.

  • சிரிப்பு கவிதை வரிகள்
  • சிரிப்பு கவிதைகள்
  • Sirippu Kavithaigal in Tamil
  • Sirippu Kavithai in Tamil

சிரிப்பு கவிதைகள் வரிகள்

ஒரு பெண்ணின் அழகை
வெளிப்படுத்த விலை உயர்ந்த
ஆடை தேவையில்லை.. அவளது
அழகான சிரிப்பு போதும்..!

கோடி அழகு உலகினில்
இருந்தாலும் உன் சிரிப்பு
எனக்கு கொள்ளை அழகு..!

சிரிப்பு.. அது நீக்கும்
உன் மனக்களைப்பு.. சிரிப்புக்கு
எதிரி வெறுப்பு சிரித்தால்.. உன்
பேச்சில் தவழும் இனிப்பு..!
வேண்டாம் யாரோடும்
மனக்கசப்பு..!

சில்லறை ஒன்றும்
அவசியமில்லை சிரிப்பதற்கு..
வாழ்க்கை பாதையில் சிரிப்பை
ஆங்காங்கே சிதறவிட்டு
செல்வோமே உறவுகள்
மலரட்டும்..!

உன் வேதனை பலரை சிரிக்க
வைக்கலாம்.. ஆனால் உன் சிரிப்பு
ஒருவரை கூட வேதனை
படுத்தக்கூடாது..!

தனிமையில் அழுவது கூட
வலிக்கவில்லை.. பிறர் முன்
சிரிப்பது போல் நடிப்பது தான்
வலிக்கிறது..!

வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கு
வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்
அர்த்தங்கள் ஆயிரம் உண்டு..
வலிகளை சுமந்து வழியைத் தேடும்
பயணம் தான் வாழ்க்கை..!

இதுவரை நான் எழுதாத கவிதை
உன் சிரிப்பு.. இனிமேல் என்னால்
எழுத முடியாத கவிதை
உன் வெட்கம்..!

இந்த குழந்தைகளை போல்
சிரிப்பு நம் முகத்தில் எப்போதும்
குடியிருந்தால் மகிழ்ச்சி
நிச்சயம்..!

உன் உதட்டோரம் சிதறி
விழுகின்ற சிரிப்பு பூக்களால்
சிந்தனை இழந்து தவிக்கிறேன்..
பெண்ணே சிகிச்சை அளிப்பாயா..?

பக்கவிளைவுகள் இல்லாத
ஒரே மருந்து சிரிப்பு மட்டுமே..
உலகத்தில் மிகவும் அழகான
விஷயம் அதனால் எப்போதுமே
மகிழ்ச்சியோடு இருங்கள்..!

சிரிப்பு இல்லாத வாழ்க்கை
சிறகு இல்லாத பறவைக்கு சமம்
பறவைக்கு அழகு சிறகு..
நமக்கு அழகு சிரிப்பு..!

அனைத்து உதடுகளுக்கும்
தெரிந்த ஒரே சர்வதேச மொழி..
சிரிப்பு..!

துன்பம் வரும் வேளையில்
எல்லாம் சிரிக்க வேண்டுமாம்..
அப்படி பார்த்தால் நான்
எல்லாம் எப்போதும்
சிரித்துக்கொண்டே தான்
இருக்க வேண்டும்..!

வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டு போகும்.. நம்
முகத்தில் புன்னகை சேர்ந்தால்
தான் அழகும் சேரும்.. நாமும்
சிரித்து மற்றவர்களையும்
சிரிக்க வைப்போம்..!

பிறர் மனம் நோகாமல் சிரிப்போம்..
அடுத்தவரையும் மனதார
சிரிக்க வைப்போம்..!

வாழ்க்கை உனக்கு அழுவதற்கு
நூறு காரணங்கள் கொடுத்தால்..
என்னிடம் சிரிப்பதற்கு ஆயிரம்
காரணங்கள் உள்ளன என
எடுத்துக் காட்டுங்கள்..!

எப்போதும் உன்னோடு இருக்க
ஆசைப்படுகிறேன்.. உன்
கோபத்தால் என்னை இழந்து விடாதே..
இப்படிக்கு புன்னகை..!

நம்மை உயிராய் நேசிப்பவர்களின்
ஒரு சிரிப்பு போதும் மனதில்
உள்ள காயங்களை குணப்படுத்த..!

மனதில் பட்டதையெல்லாம்
உங்கள் சொந்தங்களிடம்
பேசாதீர்கள்.. உங்கள் முன்
போலி சிரிப்பு சிரித்துக்கொண்டு
நீங்கள் எப்போது விழுவீர்கள் என
மனதுக்குள் நினைப்பவர்கள்
தான் இன்றைய சொந்தங்கள்..!

சிரிப்பு என்பது கலை..
சிரிப்பு என்பது கருவி.. சிரிப்பு என்பது
மந்திரம்.. சிரிப்பு என்பது
மகத்துவம்.. சிரிப்பு என்பது
மருத்துவம்..!

யார் மனதையும் காயப்படுத்தாத..
புன்னகை மட்டும் தான்
உலகத்திலேயே பேரழகு..!

உன்னை சிரிக்க வைக்க
நினைப்பவர்களை நீயும்
சிரிக்க வை.. உன்னைப் பார்த்து
சிரிப்பவர்களை நீ சிந்திக்க வை..!

மேலும் படியுங்கள்…