ஒரு வரி கவிதை – Oru Vari Kavithai In Tamil

Oru Vari Kavithai In Tamil

இந்த பதிவில் “ஒரு வரி கவிதை – Oru Vari Kavithai In Tamil” பார்க்கலாம்.

  • ஒரு வரி கவிதை – Oru Vari Kavithai In Tamil
  • Oru Vari Kavithai In Tamil

Oru Vari Kavithai In Tamil

1. கோபத்தை கைவிட்ட மனிதனின் வாழ்வில் துன்பம் குறுக்கிடுவதில்லை.

2. புலன்களின் கவர்ச்சி அறிஞர்களைக் கூட தடுமாறச் செய்து விடுகிறது.

3. உயிருடன் இருக்கும் வரை உடன்பிறந்த குணங்கள் ஒருவரை விட்டு நீங்குவதில்லை.

4. நல்வழியில் செல்வம் தேடி நல்லதையே செய்யுங்கள்.

5. புத்தியால் மனதை அடக்கியாள்பவன் வெற்றி இலக்கை எட்டுவது உறுதி.

6. அறவழியில் பொருள் தேடி, நல்வழியில் செலவழிப்பதே சிறந்த வாழ்வு.

7. மனதின் சக்தியை உணர்ந்து நடந்து கொள். ‘நிச்சயம் வாழ்வில் முன்னேறுவேன்’ என்று செயல்படு.

8. கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. அதற்கு மாறாக, எண்ணத்தால் பரந்த மனப்பான்மை கொள்.

9. தர்மத்தில் நம்பிக்கை இல்லாதவனுக்கு மற்ற நல்ல விஷயங்களிலும் நம்பிக்கை ஏற்படுவதில்லை.

10. உதவி செய்யும் குணத்தினால்தான் மனிதனுக்குள் உண்மையான இன்பம் பிறக்கிறது.

11. தேவைகளைக் குறைத்துக் கொண்டால் வாழ்வில் திருப்தியும், சந்தோஷமும் உண்டாகும்.

12. தவறுகளைச் சிந்தித்து, உங்களை நீங்களே திருத்திக் கொள்ளுங்கள்.

13. நல்லதை மட்டுமே பார்க்கவும், கேட்கவும் செய்யுங்கள். எல்லாச் சிறப்பும் தேடி வரும்.

14. உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொண்டால், தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்.

15. தேவைக்கு மட்டும் அளவாகப் பேசுங்கள். மற்ற நேரத்தில் பேசாதிருக்க முயலுங்கள்.

16. தனக்கென வாழாமல், பிறருக்காக வாழ்பவர்களே உயர்ந்தவர்கள்.

17. எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும், சிந்தனையில் உயர்ந்த மனிதராக இருப்பது அவசியம்.

18. எளிய வாழ்க்கை, உயரிய சிந்தனை கொண்டவராக வாழ்வு நடத்துங்கள்.

19. பேச்சில் எப்போதும் இனிமையும், இரக்கமும் கலந்திருக்க வேண்டும்.

20. தேவையற்ற பேச்சைத் தவிருங்கள். அளவுடன் பேச முயலுங்கள்.

ஒரு வரி கவிதை தமிழ்

21. பிறரைக் குறை சொல்வது என்பது ஒருவரைத் திட்டுவதற்குச் சமமானது.

22. மற்றவருக்கு மகிழ்ச்சியைக் கொடுங்கள். அதைக் கண்டு நீங்களும் மகிழ்ச்சியை அனுபவியுங்கள்.

23. உலகில் நீ ஒரு வழிப்போக்கன் என்பதை மறந்து விடாதே. எப்போதும் இது ஞாபகத்தில் இருக்கட்டும்.

24. விதியை உயரிய எண்ணங்களாலும், நற்செயல்களாலும், நற்சிந்தனையாலும் மாற்றியமைக்க முடியும்.

25. உங்களது தவறையும், குறையையும் ஒப்புக் கொள்ளுங்கள், அவ்வாறு செய்தாலே நீங்கள் திருந்த வழிபிறக்கும்.

26. உயரிய எண்ணங்களை வளர்த்தால் உயரிய ஒழுக்கம் உருவாகும். தீய சிந்தனையால் தீமையே விளையும்.

27. கணக்கற்ற தத்துவ ஞானத்தைவிட, சிறிய பயிற்சி எவ்வளவோ சிறந்தது.

28. உங்களால் ஒன்றை கனவுகாண முடியுமென்றால், அதை உங்களால் செய்யவும் முடியும்.

29. ஒரு செயலை ஆரம்பிப்பதற்கான வழி, பேச்சை நிறுத்திவிட்டு செயல்பாட்டை தொடங்குவதே.

30. துன்பத்தில் பூக்கும் பூக்களே அனைத்திலும் அரிதான மற்றும் மிகவும் அழகான ஒன்று.

31. தொழிலுக்காக ஒருவர் ஒருபோதும் அவரது குடும்பத்தை புறக்கணிக்கக் கூடாது.

32. சூரிய உதயத்தைப் பார்த்தபடியே எப்போதும் நில் அப்போதுதான் நிழல் உனக்குப் பின்னால் விழும்!

33. அனைத்திலும் வெற்றி பெறுவதற்கான ரகசியம், விடாமுயற்சியே.

34. கனவுகளை விட எதிர்காலத்தை உருவாக்கும் வேறு விஷயம் எதுவுமில்லை.

35. நாற்பது வயது என்பது இளைஞர்களின் முதுமை; ஐம்பது வயது என்பது முதியவர்களின் இளமை.

Read More Tamil Quotes.

தினம் ஒரு பொன்மொழி

படித்ததில் பிடித்தது தத்துவங்கள்