இயற்கை அழகு கட்டுரை

Iyarkai Alagu Katturai In Tamil

இந்த பதிவில் “இயற்கை அழகு கட்டுரை“என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டமைந்துள்ளன.

இயற்கையின் அழகினை விபரித்து உரைப்பதாக இருந்தால் கூறிக் கொண்டே இருக்கலாம்.

இயற்கை அழகு கட்டுரை – 1

இறைவன் படைத்த விடயங்கள் அனைத்துமே அழகானவை ஆகும். அதில் மிகவும் சிறந்தது எது என்றால் அது இயற்கையே ஆகும். மனிதனை இறைவன் படைக்கும் போது அவனுக்கு தேவையான எல்லாவற்றையும் உருவாக்கிய பின்னரே படைத்தார்.

அந்த படைப்பினால் உருவாகிய இயற்கையின் அழகினை விபரிக்க தமிழ் அகராதியில் உள்ள சொற்கள் போதாது. ஏனெனில் இயற்கையின் அழகினை விபரித்து உரைப்பதாக இருந்தால் கூறிக் கொண்டே இருக்கலாம்.

நாம் வாழும் இந்த பூமிக்கு நீலக்கோள் என பெயர் வருவதற்கு காரணமான நமது பூமியை சுற்றியுள்ள நீலக்கடலானது கண்கவர் அழகினையும் தன்னுள் அளவற்ற ஆச்சரியங்களையும் கொண்டதாக காணப்படுகின்றது.

அதனோடு இணைந்த எல்லை இல்லாத நீலவானமும் மிக அழகானது ஆகும். கடலும் வானமும் ஒன்றாக சேரும் இடத்தில் கடலுக்கும் வானத்திற்கும் இடையிலான எல்லையை பிரித்து அறிவது மிக கடினமான ஒரு விடயமாகும்.

இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களான நடப்பவை, பறப்பவை, நீந்துபவை அனைத்துமே இயற்கையின் அழகினை பறை சாற்றும் வகையில் தனித்துவம் வாய்ந்தவையாக காணப்படுகின்றன.

பூமியின் மேற்பரப்பில் வானளாவ உயர்ந்திருக்கும் மலைகளும் அவற்றில் மோதிச் செல்லும் மேகங்களும் அவை உருவாக்கும் மழையும் அதனால் உண்டாகும் வானவில் என்பனவும் மலை உச்சியில் உருவாகும் ஆறுகளும்

அதனால் உண்டாகும் நீர்வீழ்ச்சிகளும் அவை கடந்நு செல்லும் பள்ளத்தாக்கு பாதைகளும் அந்த ஆறு வளர்க்கும் காடுகளும் இயற்கை கொண்ட பேரழகு ஆகும். இவற்றை கண்டு களிக்க இறைவன் தந்த இரு கண்கள் போதாது என்பது என் கருத்து ஆகும்.

இயற்கையின் அழகு கட்டுரை – 2

நாம் வாழும் பூமியானது இயற்கையின் கைவண்ணத்தால் அழகாக உருவாக்கப்பட்டு உள்ளது. நாம் கண்ணால் காண்பவை காணாதவை எல்லாம் இயற்கையுடன் ஒன்றித்தவையாகவே உள்ளன.

உதாரணமாக நாம் கண்ணால் காணக்கூடிய நிலம், நீர், ஆகாயம் போன்றவையும் கண்ணால் காண முடியாத காற்றும் இயற்கையின் பரிமாணங்களே ஆகும்.

இவை மட்டுமல்ல பிரமாண்டமான தோற்றம் கொண்ட யானை, திமிங்கலம் போன்றவையும் வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத நுண்ணங்கிகள் போன்றனவும் கூட இயற்கையின் பாகங்களாகவே உள்ளன.

இவ்வாறு அமையப்பெற்ற இயற்கையானது தன்னகத்தே கொண்டுள்ள அழகோ பலவிதமாக இந்த பூமி எங்கும் பரவிக் காணப்படுகின்றன.

பட்சி இனங்களை எடுத்துக் கொண்டால் மனம் கவரும் மஞ்சள் வண்ண மாம்பழக் குருவி, மழை மேகம் கண்டு ஆடும் மயில், இனிய குரலில் கூவும் கருங்குயில் பல வகை உண்டு.

அதே போல புள்ளி மான், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி என பல வகை விலங்குகளும் இயற்கை அழகினை பறை சாற்றுபவையாக காணப்படுகின்றன.

அதுமட்டுமல்ல பரந்து விரிந்த மலைத் தொடர்களும் பசும் காடுகளும் வளைந்து நெளிந்து செல்லும் ஆறுகளும் அதனுள் துள்ளி திரியும் மீன்களும் கூட இயற்கை வெளிப்படுத்தும் அழகே ஆகும்.

இவ்வகை அழகுடன் விளங்கும் இயற்கையினை நவீன யுகத்தில் அதன் முக்கியத்துவம் மறந்து மனிதன் தன் விருப்பத்திற்கு மாற்றியமைக்க முயலும் போது அது தன் அழகை இழக்கின்றது.

எனவே இயற்கையோடு இசைந்து அதனை பேணிப் பாதுகாப்பது எம் அவைவரினதும் தலையாய கடமையாகும்.

You May Also Like:
சுற்றுலா வளர்ச்சி கட்டுரை
இயற்கை பேரிடர் கட்டுரை