மாவீரன் நெப்போலியன் பொன்மொழிகள்

Napoleon Bonaparte Quotes In Tamil

முடியாது என்பது என் அகராதியில் கிடையாது என உரைத்த மாவீரன் நெப்போலியன் பொன்மொழிகள். வரலாற்றில் மாவீரன் நெப்போலியன் போனபார்ட்க்கு தனி இடம் உண்டு.

  • நெப்போலியன் பொன்மொழிகள்
  • Napoleon Bonaparte Quotes In Tamil

மாவீரன் நெப்போலியன் பொன்மொழிகள்

உன்னை வெற்றி கொள்ள
யாரும் பிறக்கவில்லை
என்று நினைக்காதே..
எல்லோரையும் வெற்றி கொள்ள
நீ பிறந்திருக்கிறாய்
என நினைத்துக்கொள்..
வெற்றி உன் பக்கம்.

ஒரு வீரனுக்கான முதல் தகுதி..
சோர்விலும் பொறுமையாக
இருப்பது..
தைரியம் என்பது
இரண்டாவது தகுதியே.

இரவில் உங்கள் உடைகளை
தூக்கி எறியும்போது
உங்கள் கவலைகளையும்
தூக்கி எறிந்து விடுங்கள்.

குழந்தைகளின் எதிர்காலம்
எப்போதும் தாயின்
செயலில் தான் தங்கியிருக்கிறது.

இறக்கும் நேரத்தை விட
துன்பப்படும் நேரத்திலேயே
நமக்கு அதிக தைரியம்
தேவைப்படுகிறது.

நீங்கள் ஒரு செயலலை
சிறப்பாக செய்ய விரும்பினால்
அதை நீங்களே செய்யுங்கள்.

நமது உடலுக்கு தேவைப்படும்
சிறந்த சிகிச்சை
அமைதியான மனமே.

வெற்றி கிடைக்குமோ என்ற
ஐயம் நிச்சயம் தோல்வியை
நோக்கியே கொண்டு செல்லும்.

நட்புக்கு உயிரைக் கொடுப்பது
இலகுவானது ஆனால் உயிரைக்
கொடுப்பதற்கு தகுதியான
நட்பு கிடைப்பது அரிது.

நாம் நமது தேவைகளை மட்டுமே
கணக்கில் எடுத்துக்கொள்ளுகிறோமே
தவிர.. நமது திறன்களைப் பற்றி
ஒருபோதும் சிந்திப்பதில்லை.

கற்பனை வளமே
இந்த உலகை ஆள்கின்றது.

காலத்தின் அருமையை
புரிந்து கொள்ளாதவர்கள்
வெற்றி அடைய முடியாது.

உங்கள் முன்னேற்ற பாதையை
நோக்கி அடி எடுத்து வையுங்கள்
அது எவ்வளவு சிறியதாக
இருந்தாலும் பரவாயில்லை.

என்னிடமிருந்து அனைத்தையும்
பறித்துக் கொள்ளுங்கள்
நான் வெற்றி பெற என் நம்பிக்கை
மட்டும் எனக்கு போதுமானது.

உலகில் வெற்றி பெற வேண்டுமானால்
ஏற்கெனவே நீங்கள் வெற்றி
பெற்றுவிட்ட மாதிரி மற்றவர்களுக்கு
தெரிய வேண்டும்.

நாளை நாளை என
ஒரு செயலை பிற்போடுவது
வெற்றியை தள்ளி வைப்பது
போலாகும்.

நம்பிக்கை என்ற
ஒரு வார்த்தையின் முன்னால்
துன்பங்கள் எல்லாம்
நீங்கி விடுகின்றன.

நாளை மகிழ்ச்சியாக
இருக்க வேண்டும் என்பதற்காக
இப்போது மகிழ்ச்சியுடன்
உழைத்துக்கொண்டிருக்கும்
ஒவ்வொருவருக்கும் எந்த நாளும்
இன்பமான நாள் தான்.

வெற்றி எண்ணத்தைப்
பொறுத்தே அமைகிறது.

நீ உன் வலது காலை
முன்னே எடுத்து வை.
உன் இடது கால் தானாகவே
முன்னால் வந்துவிடும்.

பொதுவாக தலைசிறந்த
அறிவு என்னவென்றால்
உறுதியாகத் தீர்மானித்தலே.

வீரமில்லாத மக்களைக்
கொண்ட நாடு அடிமை
நாடாகவே இருக்கும்.

ஆற்றலை வெளிப்படுத்தும்
வாய்ப்பு இல்லாவிட்டால்
அந்த ஆற்றல் மதிப்பற்றுப்
போய்விடுகிறது.

சாதாரண மனிதன்
விழித்திருக்கும் போது
தூங்குகிறான்.
சாதிக்கப்பிறந்தவன்
தூங்கும் போதும்
விழித்திருக்கிறான்.

நல்ல காரியங்களை செய்ய
ஒருபோதும் பயப்படாதீர்கள்..
தாமதமின்றி உடனே
நல்ல காரியங்களைச்
செய்யுங்கள்.

வாழ்க்கையில் வெற்றி
அடைய வேண்டுமானால்
கஷ்டங்களை
ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இலட்சியத்தை அடிக்கடி
மாற்றிக்கொள்ள கூடாது.
அதை அடைவதற்கான வழிகளை
மட்டுமே மாற்றிக்கொள்ள வேண்டும்.

மேலும் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள்

நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள்