அன்பு பற்றிய பொன்மொழிகள்

Anbu Ponmozhigal In Tamil

இந்த பதிவில் “அன்பு பற்றிய பொன்மொழிகள்” காணலாம்.

  • அன்பு பொன்மொழிகள்
  • Anbu Ponmozhigal In Tamil

அன்பு பற்றிய பொன்மொழிகள்

1.இரக்கம் உள்ள நெஞ்சில்
அன்பு பிறக்கும்..
நாணமுள்ள நெஞ்சில்
அறம் பிறக்கும்.

2. அன்பு இருக்கும் இடம் சொர்க்கம்..
அன்பு மறைந்த இடம் நரகம்.

3. அன்பு நிறைந்த இன்சொல்..
இரும்பு கதவினை கூட திறக்கும்.

4. அன்புள்ள மனிதன் எதிலும்
வெற்றி பெறுவான்.

5. எப்பொழுது அன்பு மற்றும்
திறமை இரண்டும் ஒன்றிணைந்து
செயல்படுகிறதோ..
அப்பொழுது ஒரு தலை சிறந்த
வெற்றியை எதிர்பார்க்கலாம்.

6. அன்புள்ள மனிதன்தான் எதிலும்
வெற்றி பெறுகிறான்.

7. வார்த்தைகளில் உள்ள கருணை
நம்பிக்கையை உருவாக்கிறது..
சிந்தனையில் உள்ள கருணை
ஆழ்ந்த அறிவை உருவாக்கிறது..
கொடுத்தலில் உள்ள கருணை
அன்பை உருவாக்கிறது.

8. உங்கள் அன்பை இரகசியமாக
வைத்திருக்காதீர்கள்.

9. அன்பான செயல் மருந்தாகவும்
இருக்கும்..
நல்ல வாழ்த்தாகவும் இருக்கும்.

10. உயிர்கள் மீது அன்பு செலுத்துங்கள்..
செடிக்கு நீர் விடுவதும்..
விலங்கிற்கு உணவு அளிப்பதும்
சிறந்த தர்மம்.

11. உங்களுக்கு மூன்று
சக்தி வாய்ந்த வளங்களான
அன்பு, பிராத்தனை மற்றும் மன்னிப்பு
ஆகியவற்றை ஒருபோதும்
மறந்து விடாதீர்கள்.

12. உங்கள் இதயத்தில் அன்பை
வைத்துக் கொள்ளுங்கள்..
அன்பு இல்லாத வாழ்க்கை
சூரிய ஒளியற்ற இறந்த மலர்களை
கொண்ட தோட்டத்தை போன்றது.

13. அன்பாகவும் விவேகமாகவும்
இருக்க முயல்வது உண்மையில்
சாத்தியமற்ற ஒன்று.

14. கனிவான முகத்துடன் கொடுக்கப்படும்
பரிசு என்பது இரட்டிப்பு அன்பளிப்புக்கு
சமமானது.

Anbu Ponmozhigal In Tamil

15. அன்பு இருந்தால்
நீ எல்லாம் உள்ளவன்.

16. ஒரு மனிதனை வெற்றி
கொள்வதை விட..
அவனது இதயத்தை கொள்ளை
கொள்வது சிறந்தது.

17. ஒருவன் தன் பணத்தால் நாயை
வாங்கிவிட முடியும்..
ஆனால் அன்பு ஒன்றினால் தான்
அதன் வாலை ஆட்ட வைக்க முடியும்.

18. எங்கு அன்பு தேனாக இனிக்கிறதோ
அங்கு அன்பு வாழ்க்கையானது
மலராக சிரிக்கிறது.

19. அன்பை தவிர வேறு எதுவும்
உண்மையான பாதுகாப்பு உணர்வினை
வீட்டுக்குள் கொண்டுவர முடியாது.

20. அன்பு தலை முடியைப் போன்றது..
வெட்ட வெட்ட முன்னிலும்
அதிகமாய் அது வளரும்.

21. வாழ்க்கையின் சிறந்த பகுதி
அவ்வப்போது அன்புடன் சிறு சிறு
செயல்களை செய்வது தான்.

22. அன்புக்கு மட்டுமே என்றும்
எல்லையும் இல்லை..
எதிரியும் இல்லை.!

23. பூவோடு இருப்பதால் முள்ளை யாரும்
விரும்புவதுமில்லை..
முள்ளோடு இருப்பதனால் பூவை
யாரும் வெறுப்பதும் இல்லை.

24. அன்பென்ற மொழிக்குள் அகிலமே
அடங்கி போகும் உன் சிறு அன்பால்
கொடியவரையும் குழந்தையாக
மாற்றி விடலாம்.

25. அழகான மொழி என்றால்
அது அன்பென்ற மொழி மட்டுமே..
அது யாரை வேண்டுமானாலும்
அடைத்து வைக்கும் அதன் சிறைக்குள்.

26. செல்வங்கள் இன்றி கூட
இந்த பூமியில் வாழலாம்.. ஆனால்
அன்பின்றி எந்த உயிருமே
இங்கு வாழ்வது கடினம்.!

27. பெரும் கோபம் கொண்டவரையும்
அன்பாலே அடக்கி விடலாம்..
எந்த ஆயுதத்திற்கும்
அடி பணியாதவர்களையும் அன்பென்னும்
ஆயுதத்தால் பணிய வைத்து விடலாம்.

28. பணம் கொடுத்து எதை
வேண்டுமானாலும் வாங்கி விடலாம்..
அன்பென்ற மருந்தினை மட்டும்
எதை கொடுத்தும் வாங்க முடியாது.

மேலும் பதிவுகளை படியுங்கள்…

அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்

மன அமைதி கவிதைகள் – Amaithi Kavithai